புதன், 28 பிப்ரவரி, 2024

பாரம்பரியத்தை மீட்போம் எபிசோட் 5


நவீன மருத்துவம் காலை உணவை    "பிரேக் பாஸ்ட்" என்று அழைக்கிறது.          
நமது உணவில் காலை உணவு மிக மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது .    நமது பாரம்பரிய பெரியோர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்த்தார்கள். காலையில் காலைக்கடலன் களை முடித்த பிறகு நீராகாரத்தையும் அதில் உள்ள பழைய சாதம் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை காலை உணவாக உண்டார்கள்.

இந்த நூற்றாண்டில் சிறந்த காலை உணவு இட்லி, வடை, சட்னி, சாம்பார்  என உலக சுகாதார நிலையம் அறிவித்திருக்கிறது ஏனெனில் இது சரிவிகித உணவாக அமைகிறது மாவு சத்து ,புரத சத்து, கொழுப்பு மூன்றுமே தேவையான அளவில் கிடைக்கிறது.

இந்த அவசரமான காலகட்டத்தில் நமது பிரதான உணவாகிய அரிசியில் இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம், ஆப்பம், போன்றவற்றை அடிக்கடி உண்பதால் அரசியில் உள்ள அதிக அளவு மாவுச்சத்து உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் காரணமாக அமைகிறது.

நவீன உணவியல் ஆராய்ச்சியாளர்கள் இதே இட்லி பொங்கல் தோசை போன்ற காலை உணவை தினம் ஒரு சிறுதானியத்தை பயன்படுத்தி செய்து பார்த்து அதனுடைய முடிவுகள் மிக நல்ல பலன்களை தந்தது அறிந்திருக்கிறார்கள்



எனவேதான் எம் எஸ் international நிறுவனம் BSB healthcare நிறுவனத்துடன் இணைந்து இது இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்றவற்றை சிறு தனியங்கள் மூலமாக செய்து முருங்கை இலை, கருவேப்பிலை புதினா, கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை பயன்படுத்தி துவையல் சட்னி செய்து காலை உணவுடன் எடுத்துக் கொள்ளும்போது அது நமது உடலில் சர்க்கரை அளவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்கிறது.

மாற்றாக தமிழகத்தின் கும்பகோணம் மாவட்டத்தில் விளையும் இந்த நவீன ரக அரிசியை பயன்படுத்தி மிக நல்ல பலனை கண்கூடாக காணலாம். 

மதிய உணவோடு நமது வள்ளலார் வழங்கிய தினம் ஒரு கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளில் உள்ள குளோரோஃபல் என்ற மூலக்கூறும் நமது ரத்தத்தின் உள்ள ஹீமோகுளோபின் என்கின்ற உயிர் சத்து மூலக்கூறுகளும் 99.9% ஒத்திருக்கிறது அன்றே நமது வள்ளலார் அவர்கள் அறிந்துள்ளார்கள்.






நமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானியங்கள் ஏழு வகைகளிலும் குறைந்த அளவு மாவுச்சத்தும் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்தும் அல்லாது தேவையான விட்டமின்களும் மினரல்களும் உள்ளன. இவைகளை வாரம் மூன்று முறை காலையில் பயன்படுத்தினால் போதும்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு வகைகளை பாருங்கள் அனைத்திலும் அதிக அளவு புரதச்சத்து உள்ளது இவைகளையும் அவ்வப்போது பயன்படுத்துங்கள்.
நமது முன்னோர்கள் நவ தானியங்களை மிகவும் பாதுகாப்பாக நமக்காக வைத்திருந்தார்கள் இதனை அவர்கள் கோபுர கலசங்களில் மறைத்து வைத்து பாதுகாப்பாக நமக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் எல்லா விதைகளும் 10 வருடங்களில் செயல் இழந்து போகும் என்பதால் 12 ஆண்டுக்கு ஒரு முறை அவற்றை எடுத்து மறுபடியும் கும்பாபிஷேகம் செய்வார்கள்.
உயிர் நீத்தோர்களுக்கு ஈமை காரியங்களை செய்யும்போதும், கோவில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுக்கும் போதும் நவதானியங்களை பேணிக்காப்பார்கள்.
நாம் இவைகளை நம் அன்றாட உணவில் சிறிதளவு முளைக்கட்டி பயன்படுத்தி வந்தால் வீணாக விட்டமின் மாத்திரைகளை நாம் விலகத் தேவையில்லை.
நமது காலை உணவு மாற்றுவதன் மூலமும் மதிய உணவில் மாவு சத்து குறைந்த அரிசியை பயன்படுத்துதல மூலமாகவே 
மேல்காணும்
 உடல் பருமன் ,சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ,மகப்பேறு இன்மை போன்ற நோய்கள் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

நவீன ஆராய்ச்சிகள் புற்றுநோயாளிகளுக்கு மாவு சத்து குறைந்த உணவுகளை கொடுத்து கொடுப்பதன் மூலம் அந்த புற்றுநோய் செல்களுக்கு குளுக்கோஸ் செல்லாமல் அவைகள் அழிவது கண்கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவே மருந்து
வள்ளலார் வழி நடப்போம் 
வாழ்க வளமுடன்

lion balachandran
D324J
founderv& CEO
BSB healthcare 
9940581843



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...