திங்கள், 25 மே, 2026

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்*

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே அந்த நோய் வருகிறது. காரணம் வாழ்வியல் முறையும், உணவு பழக்க வழக்கங்களும். அது தொடர்பாக நீரழிவு நோய்க்கு காரணம் என்ன அல்லது அதன் அடிப்படை உடலியல் செயல்பாடுகள் என்ன என்பதை விளக்கும் ஒரு சிறு பதிவு இது.

முதலில் நீரழிவு அல்லது சர்க்கரை நோய் என்றால் என்ன என்பது பற்றி சிறிய மேம்போக்கான விளக்கம். (இது ஆழ்ந்த விளக்கம் அல்ல.)

நம் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் சக்தி தேவை. அதைத் தருவது நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து அல்லது கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரைச் சத்து. உதாரணமாக நாம் ஒரு சிறிய குண்டூசியை எடுக்கக் கூட விரலில் உள்ள பல லட்சம் செல்கள் நேரடியாக அதற்காக உழைக்க வேண்டும். தசை செல்கள் முதல் நரம்பு செல்கள் வரை உழைத்து அந்த விரலை அசைத்து குண்டூசியை அழுத்தமாகப் பிடித்துத் தூக்க வேண்டும். இதைத் தவிர மறைமுகமாக கண்கள் முதல் மூளை வரை பல உறுப்புகளும் பணியாற்ற வேண்டும். நாம் அதில் நேரடியாக செயல்படும் விரலை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

அந்த விரலின் செல்கள் எந்த ஆற்றல் மூலம் பணி செய்கின்றன? ஒவ்வொரு செல்லிலும் மைட்டோகாண்ட்ரியா என்ற அமைப்புகள் செல்லுக்குள் இருக்கும். இவை தான் செல்லின் பவர் செண்டர் அல்லது என்ஜின் போன்றது. இந்த மைட்டோகாண்ட்ரியா தான் நாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸாக மாற்றப்பட்ட கார்போஹைட்ரேட்டை எரித்து சக்தியை உருவாக்குகிறது.

அது போல நூற்றுக்கணக்கான மைட்டோகாண்ட்ரியாக்கள் ஒவ்வொரு செல்களிலும் இருக்கும். அது போன்ற பல லட்சம் செல்களின் செயல்பாட்டால் உருவாகும் சக்தி தான் நாம் ஒரு குண்டூசியைத் தூக்கும் சக்தி விரல்களுக்குக் கிடைக்கும்.

அந்த சக்தி கிடைக்க தேவையான முக்கியமான மூலப் பொருட்கள் குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன். இவை இரண்டும் எப்படி ஒவ்வொரு செல்களுக்கும் கிடைக்கின்றன? இரத்தம் தான் அவற்றை ஒவ்வொரு செல்களுக்கும் கொண்டு சேர்க்கிறது. இரத்தத்தில் இருந்து பெறப்படும் குளுக்கோஸையும் ஆக்ஸிஜனையும் மைட்டோகாண்ட்ரியா எரித்து சக்தியோடு கார்பன்டை ஆக்ஸைடையும் நீரையும் வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் கார்பன் டி ஆக்சைடும் நீரும் கூட செல்களில் இருந்து இரத்தத்தின் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது. 

இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற அதிகப்படியான நீரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றி விட்டு கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரல் மூலம் வெளியேற்றுகிறது. கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் போதே அதே இரத்தம் நுரையீரல் மூலம் சுவாசக்காற்றில் இருந்து ஆக்ஸிஜனை பெறுகிறது. அதன் பின் ஜீரண மணடல உணவுப் பாதை மூலம் ஜீரணிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டான குளுக்கோஸைப் பெறுகிறது. இது தான் சக்தி உருவாக்க சுழற்சி.

இந்த குளுக்கோஸின் அளவு இரத்தத்தில் கூடினால் பல்வேறு பின் விளைவுகள் வரும்.  குறைந்தால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. இதைக் கட்டுப்படுத்துவது தான் இன்சுலின் என்ற ஒரு சுரப்பு. இது கணையத்தின் (Pancreas) பீட்டா செல்கள் சுரக்கும் ஒரு ஹார்மோன். 

இந்த இன்சுலினின் வேலை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்லில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு எடுத்துச் செல்கிறது. எப்போதெல்லாம் உடல் வேலை செய்கிறதோ அப்போதெல்லாம் அந்த வேலையோடு தொடர்புடைய உறுப்புகளின் செல்களுக்கு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்திக்குத் தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருக்கும் இன்சுலின் செல்லில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவுக்குக் கொண்டு செல்கிறது. அந்த செல்லுக்கு எவ்வளவு சக்தி தேவையோ அதற்குத் தகுந்த எரிபொருளாக குளுக்கோஸை கொண்டு செல்கிறது இன்சுலின். அதாவது எவ்வளவு குளுக்கோஸ் எந்த செல்களுக்கு எப்போது தரவேண்டும் என்பதை நிர்ணயிப்பது இந்த இன்சுலின் வேலை.

எப்போதெல்லாம் உடலுக்கு சக்தி தேவைப்படுகிறதோ அப்பபோதெல்லாம் இன்சுலின் மூலமாக செல்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். அதை சரி செய்ய உடல் ஜீரணித்து தான் சேர்த்து வைத்துள்ள குளுக்கோஸை தேவைக்கு எற்ப இரத்தத்தில் கலந்து கொண்டே இருக்கும். அப்போது இரத்த சர்க்கரை அளவு தேவையான அளவுக்கு மீண்டும் நிலை நிறுத்தப்படும். இந்த சக்தி தேவையின் போது உடல் குளுக்கோஸை இரத்தத்தில் கலப்பதும், அந்த குளுக்கோஸை இன்சுலின் செல்களுக்கு எடுத்து செல்வதும், தேவை முடிந்ததும் இந்த செயல்பாடுகள் குறைவதும் கணையம் தன் இன்சுலின் சுரப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. முடிவில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய அளவுக்கு தகுந்தாற் போல இன்சுலினை சுரப்பது கணயத்தில் உள்ள பீட்டா செல்களின் வேலை.

அடுத்து நாம் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்
பொதுவாக சர்க்கரை நோய் என்பது இந்த பீட்டா செல்கள் சரியான முறையில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது தான் சர்க்கரை நோய் என்பது. இந்த பீட்டா செல்கள் சரியான முறையில் சுரக்காமல் இருப்பதற்கு நம்முடைய வாழ்வியல் முறையும் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அது போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்களினால் பாதிக்கப்பட்ட பீட்டா செல்கள் தனது சுரப்பை சரியாக சுரப்பது இல்லை. 

உடல் தனக்கு சக்தி தேவை எனும்போது ரத்தத்திலிருந்து சர்க்கரை எதிர்பார்க்கும். அப்போது பீட்டா செல் பாதிப்பினால் இன்சுலின் சுரப்பு குறைந்து ரத்தத்தில் இருந்து சர்க்கரை செல்களுக்கு கிடைக்காத போது உடல் ரத்தத்தில் சர்க்கரை இல்லை என்பதாக கணக்கில் கொண்டு உடலில் உள்ள சேர்த்து வைத்த சர்க்கரையை எடுத்து தொடர்ந்து இரத்தத்தில் கலந்து இரத்த சர்க்கரையின் இருப்பை அதிகரிக்கும். அதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக்கொண்டே போகும். இன்சுலின் சரியான அளவு சுரக்காததனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்கு செல்ல முடியாது போகிறது உடல் சோர்வு அடைகிறது. 

தற்போது நடைமுறையில் உள்ள இதற்கான சிகிச்சை முறைகளை இரண்டு விதமாக சொல்லலாம். 
1. ஆங்கில மருத்துவம் – Allopathic Medicine
2. இயற்கை மருத்துவம் 

ஆங்கில மருத்துவம் என்ன செய்கிறது என்று மேலோட்டமாக கூறினால் அந்த கணையத்தில் உள்ள பீட்டா செல்களை வேதிப்பொருட்களின் மூலம் தூண்டி அந்த பீட்டா செல்களை இன்சுலின் சுரப்பை சுரக்க வைக்கிறது அல்லது அந்த பீட்டா செல்கள் முற்றிலுமாக செயல் இழந்து போய் இருக்கும்போது இன்சுலின் என்ற அந்த ஹார்மோனை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்துவது இன்னொரு முறையாகும். மொத்தத்தில் இன்சுலின் செய்யவேண்டிய வேலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த மருந்து செய்கிறது அல்லது செய்ய தூண்டுகிறது. அதாவது நம் உடல் தன்னிச்சையாக செய்யவேண்டிய வேலையை மருந்துகள் மூலம் செய்கிறது அல்லது செய்ய வைக்கப்படுகிறது.

இயற்கை மருத்துவம் நமது சாதாரண உணவு மூலமோ அல்லது மூலிகை பொருட்கள் மூலமாகவோ அந்த பீட்டா செல்களை தூண்டி தானாக தன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. அல்லது ரத்தத்தில் இருந்து செல்லுக்குள் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு குளுக்கோஸை எடுத்து செல்லும் செயல்பாட்டை சரி செய்கிறது அல்லது மைட்டோகாண்ட்ரியாவின் உள்ளே அதன் செயல்பாடுகளை சரி செய்கிறது.

இதில் எந்த வகை மருத்துவம் நல்ல மருத்துவம் அல்லது சரியான மருத்துவம் என்று வாதிட்டால் அவரவர் தங்களுடைய மருத்துவம் தான் சிறந்தது என்று விவாதிப்பார்கள். உண்மையில் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கும் நீரழிவு நோயாளிகள் இயற்கை மருத்துவத்திற்கு செய்வது பரிந்துரைக்கத் தக்கது. அதே சமயம் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு இயற்கை மருத்துவம் வேகமாக சரி செய்யாது. ஏனென்றால் இப்போது உள்ள காலகட்டத்தில் அவர்களின் உணவு முறையும் வாழ்வியலும் மிகவும் அதிகமாக சிதைந்து இருப்பதால் பழங்கால முறைகளான இயற்கை மருத்துவம் சில சமயம் தேவைக்கான வேகத்தில் செய்யாது. 

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது. ஏனென்றால் நம் உடல் தன்னிச்சையாக வேலையை அந்த அல்லோபதி மருந்துகள் செய்ய ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக பீட்டா செல்களின் செயல்பாடுகளை எடுத்துக்கொள்வோம். அல்லோபதி மருந்துகள் பீட்டா செல்களின் செயல்பாடுகளை செய்ய ஆரம்பிக்கும் போது பீட்டா செல்கள் தனக்கு வேலை இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிச்சையாக செயல்படும் தன்மையை இழந்து வரும். அப்படி செயலிழக்க செயலிழக்க மருத்துவர் தரப்பட வேண்டிய மருந்தின் வீரியத்தை உயர்த்திக் கொண்டே வருவார். அதாவது சர்க்கரை நோயின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது அதன்பின் ஒரு நிலையில் பீட்டா செல்கள் முற்றிலுமாக செயல் இழந்து அது சுரக்க வேண்டிய இன்சுலின் சுரப்பை சுரக்காமல் நிறுத்திவிடும். அப்படி ஒரு நிலை வரும் போது இன்சுலினை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்தும் நிலைக்கு நாம் ஆளாகிறோம். மேலோட்டமாக இது தான் அல்லோபதி மருத்துவம்.

அதற்கு பதில் நாம் இயற்கை மருத்துவத்தின் பக்கம் போனால் நாம் சாப்பிடும் உணவும் நாம் சாப்பிடும் மூலிகைகளும் அந்த கயணத்தையும் அதில் இருக்கும் பீட்டா செல்களையும் சரி செய்து தானாக தனக்கு வேண்டிய இன்சுலின் சுரக்க வழி செய்கிறது. நீரிழிவு நோய்க்கான இயற்கை வைத்தியம் கண்டிப்பாக ஒரே நாளில் அல்லது ஒற்றை நேர மருந்தில் அல்லது அலோபதி போன்ற குறைந்த காலக்கட்டத்தில் நடக்காது. இயற்கை மருத்துவம் நீண்ட நாட்களாக நிதானமாக செயல்பட்டு தானாக உடலை தன் நிலைக்கு திரும்பும் வழி. முறையாக தயாரிக்கப்பட்ட இயற்கை வழி மருந்துகள் அல்லது உணவு மூலம் சரி செய்தல் போன்றவற்றில் பெரும்பாலும் பக்க விளைவு எதுவும் இருக்காது.

சரி அப்படியானால் எல்லோருமே மொத்தமாக இயற்கை மருத்துவத்திற்கு செல்லலாமா என்றால் அதுவும் சரியல்ல. இயற்கை மருத்துவம் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இயல்பாக அதனை சரி செய்ய முடியும். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் அந்த அளவுக்கு பொறுமையாக அதன் கட்டுப்பாடுகளோடு மருந்து எடுக்க யாரும் தயாராக இல்லை அதனால் அல்லோபதி மருத்துவத்தின் மூலம் ஓரளவு சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் பின் இயற்கை மருத்துவத்தை இணையாக சாப்பிட்டு உடலை நல்ல நிலைக்கு திருப்பிக் கொண்டு வரலாம். 

எங்களது நிறுவனம் கீழே இருக்கும் நீரழிவு நோய்க்கான நமது பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டு சூப் பொடி தயாரித்து வருகிறது. அந்த சூப் பொடியில் இருக்கும் மூலிகைகள் பட்டியல் கீழே உள்ளது.

சிறுகுறிஞ்சான்
கறிவேப்பிலை
பெருஞ்சீரகம்
நெல்லிக்காய் 
நாவல் விதை 
வேப்ப இலை
மல்லி விதை
ஆவாரம் பூ
அருகம்புல் 
வெந்தயம்
புதினா 
சீரகம்
ஓமம்
மற்றும் பல…

Price Details
நீரழிவு நோய்க்கான சூப் பொடி 
5gm - ₹ 15 
50 gm - ₹ 100  
250gm - ₹ 460
+ எத்தனை எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரே கூரியர் செலவு
₹ 50 தமிழ் நாடு மற்றும் ₹ 100 மற்ற மாநிலங்கள்

வெள்ளி, 15 மே, 2026

அடுத்தது என்ன? +2 க்கு பிறகு ....

https://docs.google.com/document/d/1Wq5mEA7NnRK5NLfA0p7uO_ci3b8IISUrFAzY7J7lV4Y/edit?usp=sharing

12 வது படித்த  மாணவர்களுக்கு 

 வேலை  வாய்ப்பு தரும் 

 இனை மருத்துவ பயிற்சிகள்


    தமிழக மாணவர்களின் நிலைபாடு என்ன


தமிழகத்தில் ஆண்டு தோறும் சுமார் 8  லட்சம்  மாணவர்கள் 

பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள்


இவர்களில் 7 லட்சம் மாணவர்கள் தேர்சி பெற்று மேல் படிப்பை 

தொடர்கிறார்கள்


மாணவர்களின் அனைவரின் ஆசையும் மருத்துவம் அல்லது 

பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிப்பது தான்.


இவர்களில் 6 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்

இதில் சுமார் 1,50,000 மாணவர்கள் Neet தேர்வு எழுதுகிறார்கள்

இவர்களில் 75,000 மட்டுமே தகுதி நிலையை அடைகிறார்கள்


தமிழகத்திலுள்ள 74 மருதுவ கல்லூரிகளில் சுமார் 10,000 MBBS இடங்களும்

சுமார் 3000 BDS இடங்களே உள்ளன


மருத்துவ துறையில் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற ஆர்வம் இருத்தாலும்

யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் துவண்டு விடாமல்

மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற முயலவேண்டும்.


மற்ற 60,000 மாணவர்களும் துவண்டு விடாமல் மறு முயற்சி பலிக்கும் வரை

வாளாவிருக்காமல்  சென்னையில் உள்ள 

BSB HEALTH CARE நிறுவனத்தை அணுகினால்  அடுத்து என்ன செய்ய 

வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை

இலவசமாக அளிக்க தயாராக இருக்கின்றது.


தமது தமிழகத்தில் 20 க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிபுகள் 

உள்ளன. இதில் 10 முதன்மையான சான்றிதழ் மட்டும் பட்டய பயிற்சிகள்

உள்ளன.







       அவைகள்

  1. Bachelor of Physiotherapy (BPT)

  2. Bachelor of Science in Nursing (BSc Nursing)

  3. Bachelor of Occupational Therapy (BOT)

  4. Bachelor of Pharmacy (BPharm)

  5. Bachelor of Medical Lab Technology (BMLT)

  6. Bachelor of Optometry (BOptom)

  7. Bachelor of Radiation Technology (BRT)

  8. Bachelor of Speech, Language, and Hearing Sciences (BSLHS)

  9. Bachelor of Audiology and Speech-Language Pathology (BASLP)

  10. Diploma in Medical Imaging Technology (DMIT)

  11. Diploma in Operation Theatre Technology (DOTT)

  12. Diploma in Medical Laboratory Technology (DMLT)

  13. Diploma in Dialysis Technology (DDT)

  14. Diploma in X-Ray Technology (DXT)

  15. Diploma in Ophthalmic Technology (DOT)

  16. Diploma in Pharmacy (DPharm)

  17. Diploma in Dental Hygiene (DDH)

  18. Diploma in Dental Mechanics (DDM)

  19. Bachelor of Science in Medical Radiologic Technology (BSc MRT)

  20. Bachelor of Science in Perfusion Technology (BSc Perfusion Technology)


இந்தகைய பயிற்சிகளை  நீட் தேர்வு இன்றி படிக்கலாம் 

பல்வேறு  அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும் 

தனியார் நிறுவனங்களிலும் மிக எளிதாக பயின்று 

மருத்துவ துறையினருக்கு இணையாக பணியாற்றி 

பேரும் புகழும் பணமும் பெறலாம்.



  சென்னையில் உள்ள 

 BSB health care 

 நிறுவனம்,

இறுதி தேர்வில் தோல்வி அடைந்த லட்சம் 

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறுகிய கால 

பயிர்சியை வடிவமைத்து அவர்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி

பகுதி நேர வேலை வாய்ப்பையும் அளித்து அவர்களை மீண்டும்  பள்ளி இறுதி

தேர்வை எதிர் கொள்ள வைத்து தேர்சியை பெற வைத்து பின்னர் 

 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BSC microbiology BSC biochemistry

போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து பயில வைத்து பின்னர் முதுகலை 

படிப்பை முடித்து படிப் படியாக உயர்ந்து முனைவர் பட்டம் பெற்று

இவர்களும் தங்களில் பெயருக்கு முன்னால் DOCTOR என்று போட்டுக்

கொண்டு பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.என்கின்ற நிலைப்பாட்டை கொள்கையாக வைத்திருக்கின்றது


                 இதைத்தான் எமது நிறுவனம்

 

 BECOME A DOCTOR  WITH OUT NEET 

என் கின்ற வாசகத்தை விளம்பர படுத்தி வருகின்றது.


இந்த குறுகிய கால பயிற்சியை பெறுவதன் மூலம் 6 மாதங்களில்

தொற்றா நேய்களை பற்றியும்  அவைகளை எவ்வாறு பரிசோதித்து 

அறிவது என்பதனை பற்றியும் அதனை எவ்வாறு உணவின் மூலம்

நிவர்த்தி செய்வது என்பதனை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்


ஆபத்து காலங்களிலும் அவசர கால கட்டத்திலும் முறையான 

மருத்துவ உதவி கிடைக்கும் வரை முக்கிய கால கட்டத்தை பயண் படுத்தி

தேவையான முதல் உதவியை அளித்து விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும்


தமிழகத்தில் 17,000 கிராமங்கள் உள்ளன. தமிழக அரசு நிறைவான 

முறையில் பல் வேறு மக்கள் நல திட்டங்களை மிக நல்ல முறையில்

நடத்தி வருகின்றது.


எங்கள் நிறுவனமும் கிராமத்திற்கு ஒரு படித்த தன்னார்வளரை 

தேர்ந்த்தெடுத்து அவர்களுக்கு மிக குறைவான கட்டணத்தில்

பயிற்சி அளித்து மிக குறைந்த கட்டணத்தில்  நகர் புறங்களில்

கிடைக்கின்ற அடிப்படை மருத்துவ பரிசோதனை வசதிகளை

தமிழகத்தின் கடை கோடி தமிழனுக்கு கிடைக்க செய்ய வேண்டும்

என்பதே எங்கள் லட்சியம்.


 





தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளது.

இன்னும் 80 லட்டம் நபர்கள் சோதிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.

இவர்களை பரிசோதிக்க 10,000 நபர்கள் தன்னார்வளர்களாக தேவைபடுகிறார்கள்.

+2 வரை படித்த எவரும் இப்பயிற்சியை பெற்று உடனடி வேலை வாய்ப்பை 

பெறலாம்/








     

  


M.R.BALACHANDRAN   

  BSB HEALTH CARE 

  FOUNDER AND CEO 

  RETD, MEIDCAL LABORATORY TECHNICIANMADRAS 

  MEDICAL COLLEGE 

  GOVT HOSPITAL FOR WOMEN AND CHILDREN

  








        The total population of Tamil Nadu is 8 crores

     Total number of plus two students 8 lacks

     Failed and dropouts around one lakh

     BSB Health care adopts the dropouts and provides

     short-term online course 

  என்னை பற்றி ஒரு சிறுஅறிமுகம்

மருத்துவ கல்லூரிகளிலும் அரசு மருத்துவ மணைகளிலும் 40 ஆண்டு கால அனுபவம்

உள்ளவன்.



Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...