வியாழன், 23 ஏப்ரல், 2026

உமிழ் நீரில் உள்ள கிருமிநாசினிகள்

*வாய் வறட்சியை போக்கும் உமிழ்நீர் சுரப்பின் தூண்டி* 

வாய் வறட்சி Xerostomia என்பது உமிழ்நீர் தேவையை விட குறைவாக சுரப்பதால் அல்லது சுரக்காமல் போவதால் வரும் ஈரத்தன்மை அற்ற நிலையைத் தான் குறிக்கிறது. இது ஒரு நோய் அல்ல, ஆனால் நமது பழக்கவழக்கத் தவறுகள் அல்லது வழக்கமான நடைமுறை பிழையால் ஏற்படும் குறைபாடு. வாயில் ஈரத்தை அதிகரிக்க, நமது வழக்கமான நடைமுறையை சிறிது மாற்றுவதன் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முடியும். 

வாயில் ஈரத்தன்மை குறையும் போது வரும் பிரச்சனைகள் சில
மிக முக்கியமாக செரிமான குறைபாடு 
*வாய்துர்நாற்றம்* 
பிசுபிசுப்பான கோழையுடன் *ஓட்டும் தன்மையுடன் உள்ள வாய்* 
*தொண்டை புண்* 
*உணவை விழுங்குவதில் சிரமம்* 
தொடர்ச்சியாக *பேச இயலாமை* அல்லது பேசினால் தொண்டை வலிப்பது 
வாயில் *புஞ்சை தொற்று* 
மற்றும் பல

பொதுவாக இந்த வாய் வறட்சி நவீன மருத்துவர்களின் பக்கவிளைவுகளாலேயே அதிகம் வருகிறது. முக்கியமாக புற்று நோய்க்கு தரப்படும் ஹீமோதெரபி, மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், அலர்ஜி / ஒவ்வோராமைக்கான மருந்துகள், இரத்த அழுத்த மருந்துகள், சிறுநீர் வெளியேற்றும் மருந்துகள் நீண்ட நாட்கள் பயன்பாட்டின் போது இந்த வாய் வறட்சியை உருவாக்குகின்றன. அதே நேரம் புகைபிடித்தல், அதிகப்படியான ஆல்கஹால், அதிக சிக்கரி கலந்த காபி குடித்தல், வாய்வழியே அதிகமாக சுவாசிக்கும் பழக்கம், போதைப்பொருளை அடிமையாதல் போன்ற சில பழக்கவழக்கங்கள் கூட இந்த வாய் வறட்சியை உண்டாக்குகின்றன. இவை அனைத்தும் உமிழ்நீர் சுரப்பின் அளவை குறைக்கிறது அல்லது உமிழ்நீரின் தன்மையை பாதிக்கிறது. வாய் வறட்சி உமிழ்நீர் சுரப்பு குறைவதால் உருவாகிறது. சில நேரங்களில் இந்த உமிழ்நீரில் உள்ள நீரின் அளவு குறைவதால் அதாவது உமிழ்நீரின் அடர்த்தி அதிகமாவதால் வாய் வறட்சி உருவாகிறது. 

நமது ஐம்புலன்களும் இந்த உமிழ்நீரை தூண்டும். முக்கியமாக பசி எடுக்கும் போது நாம் பார்க்கும் உணவு, அதன் வாசனை முதல் உணவைத்த தொடும்போது, அதை பற்றி கேட்க்கும் போது வரை நமது சிந்தனை உணவை நோக்கி இருக்கும் போதெல்லாம் உமிழ்நீர் சுரப்பி தூண்டப்பட்டு உமிழ்நீர் வெளிப்படும். அதாவது நாம் உண்ணப்போகும் உணவை ஜீரணிப்பதர்க்காக நமது வாய் தயாராகிறது என்று அர்த்தம். அதே உணவு வாய்க்குள் வந்த உடன் அதன் சுவையை பொறுத்து உமிழ்நீர் வெவ்வேறு வேதிப்பொருள் கூட்டுடன் சுரக்கும். உணவின் சுவையை வைத்தே அதில் உணவில் உள்ள மூலக்கூறுகளை உணர்ந்து அதனை ஜீரணிக்கத்தக்க வகையிலான என்ஸைம்களைக் கொண்ட உமிழ்நீர் சுரக்கிறது. 

உணவு உண்ணும் போது என்சைம்களுடனான உமிழ்நீர் கட்டாயமாக தேவைப்படும். அதேநேரம் உணவு உண்ணாத போது அல்லது பசி அடங்கிய அல்லது பசி இல்லாத போது இந்த என்சைம்களின் தேவை இல்லை. ஆனால் என்சைம்கள் தேவை இல்லாவிட்டாலும் அப்போதும் வாய் உலராமல் இருக்க ஈரப்பதம் நிறைந்த குறைந்தபட்ச உமிழ்நீர் கண்டிப்பாக தேவை. அப்போது நாம் குடிக்கும் நீர் தற்காலிகமாக வேண்டுமானால் சிறிது நேரத்திற்கு ஈரப்பதத்தை பராமரிக்கும். நம் தூங்கும் நேரம் உட்பட 24 x 7 மணிநேரமும்  வாய் உலராமல் இருக்கும் அளவிற்கு குறைந்த பட்சம் இந்த உமிழ்நீர் சுரந்தே ஆகவேண்டும்.

உணவில்லாத போது சுரக்கும் உமிழ்நீரில் வாயை ஈரமாக வைத்துக்கொள்வது முதல் சில கிருமிநாசினிகள், இரைப்பையில் ஜீரணமாகாமல் இருக்கும் உணவின் தன்மையை பொறுத்து என்ஸைம்களையும் சேர்த்து சுரப்பது  வரை இருக்கும். எனவே தான் நாம் விழுங்காமல் பல்லில் ஒட்டி அதிக நேரம் வாயில் இருக்கும் உணவுத் துகள்கள் கெட்டுப்போவதால் ஏற்படும் கிருமி பரவலை தடுப்பதற்காக காலை பல்துலக்குவது நமது பழக்கமாக உள்ளது. இன்னும் சிலர் இரவு படுக்கும் முன்பும் பல்துலக்குவது உண்டு. அது வாயில் தங்கி இருக்கும் தேவையற்ற உணவுத் துகள்களை நீக்குவதன் மூலம் நீண்ட நேரம் உணவு பயன்பாடில்லாமல் இருக்கும் வாயில் கிருமிகள் அதிகரிக்காமல் இருக்க வழிவகுக்கும். தினமும் இருமுறை பல்துலக்குவது நலம்.  தினமும் காலை பல்துலக்குவது என்பது கட்டாயம். 

நமது முன்னோர்கள் அந்த காலத்தில் பிரஷ் போல பயன்படுத்திய *வேலங்குச்சி, வேப்பங்குச்சி முதல் ஆழ விழுது* வரை கிருமிநாசினியாகவும் அதில் தொட்டு தேய்த்த *உப்பு முதல் கடுக்காய் பொடி* வரை உமிழ்நீர் சுரப்பின் தூண்டியாகவும் இருந்ததால் தான் அவர்களுக்கு ஜீரண கோளாறு முதல் பல்லின் அதிக வாழ்நாள் வரை சாத்தியமானது. தெரிந்தோ தெரியாமலோ நமது முன்னோர்கள் அனுபவ அடிப்படையில் பயன்படுத்தி பலனடைந்து பொருட்களைக்கொண்டு கிருமிநாசினி முதல் ஜீரணத்தை அடிப்படையான உமிழ்நீரை சுரக்கத்தூண்டும் இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொற்பொடியை பயன்படுத்திடுவது தான் புத்திசாலித்தனம். இந்த பதிவில் நாம் பல் பொடிக்கான எந்தெந்த சேர்மானங்கள் சிறந்த உமிழ்நீர் தூண்டியாக செயல்படுகிறது என்பது பார்ப்போம். 

*அதிமதுரம் / Licorice* 
அதிமதுரத்தில் இருக்கும் glycyrrhizin என்ற இயற்கைப்பொருள் உமிழ்நீர் சுரப்பைத்தூண்டி அது தன்னிச்சையாக நீண்ட நேரம் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. Glycyrrhizin அதன் இனிப்புத்தன்மையால் சுவை உணர்வு மூலம் நேரடியாக உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது. இது வாயில் உள்ள வீக்கத்திற்கு மருந்தாகவும் சிறந்த கிருமிநாசினையாகவும் செயல்படுகிறது. 

*சுக்கு / Dry Ginger*
இஞ்சியில் முக்கியமாக உள்ள gingerols shogaols மற்றும் Oleoresins என்ற இயற்கைப் பொருட்கள்  உமிழ்நீர் சுரப்பை தூண்ட்டுகின்றன. Gingerols உமிழ்நீரைத் தூண்டுவதற்கு உதவும் ஒரு முக்கிய காரமான ஒரு இயற்கை இரசாயனம். Shogaols இஞ்சியை விட சுக்கில் தான் அதிகமாக இருக்கும். இதுவும் உமிழ்நீரைத் தூண்டுவதற்கு உதவும் ஒரு முக்கிய காரமான ஒரு இயற்கை இரசாயனம் தான். லேசான கசப்பு கலந்த காரமான சுவை கொண்ட Oleoresins  நரம்பு மண்டலத்தின் மூலமாக உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது.

*காசுக்கட்டி / Catechu* 
காசுக்கட்டியில் ஏராளமான உமிழ்நீர் சுரப்பை தூண்டும் வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் முக்கியமானது Catechin . இந்த Catechin ஒருபுறம் உமிழ்நீர் சுரப்பை தோன்றுகிறது மறுபுறம் அந்த சுரப்பை கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. உமிழ்நீர் சுரப்பின் செல்கள் அதன் காலம் முடிந்த அழியும் போது வேகமாக புதிய சுரப்பு செல்கள் உருவாக இந்த Catechin உதவுகிறது.

*கிராம்பு / Clove* 
கிராம்பில் உள்ள உமிநீர் சுரப்பை தூண்டும் முக்கியமான இயற்கை இரசாயனம் Eugenol என்ற எளிதாக ஆவியாகும் எண்ணெய். Eugenol சுவாசத்தின் மூலமாக நரம்பு மண்டலத்தின் மூலம் உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது. அதன் நறுமண, ஆவியாகும் தன்மை காரணமாக, eugenol சளி சவ்வுகளில் விரைவாக ஊடுருவி, வாயில் உள்ள உணர்ச்சி நரம்பு விளிம்புகளைத் தூண்டுகிறது, இது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்க உமிழ்நீர் சுரப்பிகளுக்கு தூண்டுகிறது. 

*பாக்கு / Areca Nut (Betel nut)* 
பாக்கில் உள்ள Arecoline என்ற இயற்கை பொருள் சிறந்த உமிழ்நீர் சுரப்பின் தூண்டியாக செயல்படுகிறது. Muscarinic Receptor என்ற நரம்பு மண்டல தூண்டுதல் மூலமாக parasympathomimetic agent ஆக முழு உணவுப் பாதையையும் இந்த Arecoline தயார்செய்கிறது. அதன் ஒரு பகுதியாக உமிழ்நீர் சுரப்பையும் தூண்டி அதிக உமிழ்நீரைச் சுரக்கச்செயகிறது. பாக்கை மெல்லும்போது, Arecoline வெளியேறி, வாயில் உள்ள கோழைப்படலம் வழியாக விரைவாக உறிஞ்சப்படுகிறது. Arecoline கோழைச்சுரப்பியில் உள்ள cholinergic axis செயல்பாட்டை தூண்டுகிறது. இது உமிழ்நீரை உற்பத்தி செய்ய உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. Arecoline உமிழ்நீரில் குவிந்து, இரத்தம் மற்றும் உமிழ்நீருக்கு இடையே மீண்டும் சுழற்றப்படும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது வாயில் அதிக செறிவுள்ள உமிழ்நீருக்கு வழிவகுக்கும், அதனால் நீண்ட நேரம் தொடர்ச்சியாக உமிழ்நீர் சுரக்க வழிவகுக்கிறது.

*ஏலக்காய் / Cardamom* 
ஏலக்காயில் உள்ள 1,8-cineole (eucalyptol) மற்றும் -terpinyl acetate போன்ற பல ஆவியாகும் நறுமண எண்ணெய் மூலக்கூறுகளின் கூட்டுச்செயலபாடுகள் தான் ஏலக்காயின் உமிழ்நீர் சுரப்பு தூண்டுதலுக்கு காரணம். ஏலக்காயை மெல்லுவது உமிழ்நீர் pH ஐ கணிசமாக அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது பல் சொத்தையைத் தடுக்கவும், வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.  ஏலக்காயில் உள்ள ஒரு செயல்பாடு மிக்க மூலக்கூறான cineole ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது, இது துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்லும். 

*கடுக்காய் / Haritaki* 
கடுக்காயில் நீரில் கரையக்கூடிய டானின்கள், குறிப்பாக செபுலிக் அமிலம், செபுலினிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், கொரிலாஜின் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த தாவர இரசாயனங்கள் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும்,  செரிமான வேகத்தை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் மற்றும் இரைப்பை குடல் நிலைமைகளை நிர்வகித்தல் மூலம்மும் உமிழ்நீர் சுரப்பை மறைமுகமாக அதிகரிக்கிறது. இருப்பினும் இது முதன்மையாக வேகமான செரிமானத்திற்காகவும் மற்றும் வாய்வுத் தொல்லை நிவாரணியாகவும் தான் செயல்படுகிறது. கடுக்காய் சில கிருமிநாசினிகளை உமிழ்நீருடன் சேர்த்து சுரக்கத் தூண்டுவதால் வாய்ப்புண் மற்றும் பல் ஈறு வீக்கம் சிகிச்சைக்காக கடுக்காய் பொடி அடிக்கடி வாய் கொப்பளிக்கும் நீரில் சேர்க்கப்படுகிறது, 

*சாதாரண உப்பு / Normal Salt* 
உப்பு தன்மையே அதன் அதீத அரிப்பு குணத்தால் அதனை நீர்த்துப்போக செய்வதற்காக உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்யும். இருப்பதிலேயே சாதாரண உப்பு தான் சிறந்த உமிழ்நீர் சுரப்புத் தூண்டி. அது மட்டுமல்லாமல் உப்பு ஒரு சிறந்த கிருமி நாசினி. சாதாரண உப்பு முதன்மையாக சுவையூட்டும் தூண்டுதலின் மூலம் இயற்கையான உமிழ்நீர் சுரப்பு தூண்டியாக செயல்படுகிறது. சுவை மொட்டுகளின் தூண்டுதல், குறிப்பாக உப்பு சுவை ஏற்பிகளைத் தூண்டுகிறது. உப்பு வாயில் வைக்கப்படும் போது நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, இது அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட அயனிகளின் சுரப்பை அதிகரிக்க உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. 

இது போன்று பல உமிழ்நீர் தூண்டிகள் இயற்கையில் உள்ளன. அவற்றை முறையாக தயாரித்து சரியான விகிதத்தில் கலந்து பல் தேய்க்கும் போது பெரும்பாலான நமது பல், வாய் மற்றும் ஜீரணப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. ஒரு பற்பொடியில் மூன்று செயல்பாட்டுக்கான சிறந்த இயற்கைப்பொருட்கள் முக்கியமாக இருக்க வேண்டும். *1. சிறந்த உமிழ்நீர் சுரப்பு தூண்டி, 2. கிருமிநாசினி மற்றும் 3. செரிமான தூண்டி.*  

வாய் வறட்சியை நீக்குவதில் பற்பொடியின் பணிக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் தூங்கும் போது உமிழ்நீர் சுரப்பு பெரிய அளவில் செயல்படாததால் காலை வாய் வறட்சி அதிகமாக இருக்கும். அதை சரி செய்ய உமிழ்நீர் சுரப்பை தூண்டும் பொருள் கலந்த பற்பொடியை பயன்படுத்துவது மிக முக்கியம். ஒரு சிலருக்கு வாய் வறட்சி இயல்பாகவே அதிகமாக இருக்கும். மேலும் சில குறைபாடு அல்லது நோய் காரணமாக குறைவாக நீர் அருந்த வேண்டிய மருத்துவ நிலை அல்லது இயல்பாகவே உடலில் இருந்து அதிக நீர் வெளியேறும் நிலை இருக்கலாம். அது போன்றோருக்கு பெரும்பாலும் வாய் வறட்சியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அவர்கள் அதிக வீரியம் கொண்ட உமிழ்நீர் சுரப்பு தூண்டி இருக்கும் பற்பொடியை இரவு படுக்கப்போகும் முன் பயன்படுத்தினால் வாய் வறட்சியின் அடுத்த நிலையான *உதடு வெடிப்பு முதல் பல் ஈறில் இரத்த கசிவு* வரை செல்வதை தவிர்க்கலாம்.

Price Details
BIXO-DENT KK - 50 gm - ₹ 90
BIXO-DENT Neem - 50 gm - ₹ 40
+ Courier Charges ₹ 50 within Tamil Nadu and ₹ 100 for out of Tamil Nadu

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...