வியாழன், 29 பிப்ரவரி, 2024

எபிசோட் 6 1-3-24

 பாரம்பரியத்தை மீட்போம்

வைகறை துயில் எழுந்து ,காலை கடன்களை முடித்துவிட்டு, காலர நடந்து, சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும், சாத்வீகமான காலை உணவு எடுப்பதன் மூலமும் நம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக விட்டமின் டி மற்றும் விட்டமின் பி 12  ஐ பெற்று குறைவின்றி வாழ முடியும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

நமது முன்னோர்கள் காலையில் ஏழையை போலவும் மதியத்தில் அரசன் போலவும் இரவில் ஆண்டியை போலவும் நம் உணவை உண்ண சொல்லி இருக்கிறார்கள்.

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சிறுதானியங்களையும் தினமும் ,        நெல்லு சோற்றை விழாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்தார்கள்.

அதிலும் குறிப்பாக ஆறு மாத பயிர் வகைகளையும் பாரம்பரிய நெல் வகைகளையும் கைக்குத்தல் அரிசியாக தயாரித்து பயன்படுத்தினார்கள்.

50 களில் வந்த பஞ்சம் காரணமாக பசுமை புரட்சி காரணமாக கலப்பின நெல் வகைகள் கோதுமை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவர்களில் உள்ள அதீத மாவு சத்து இந்தியர்களுக்கு உடற்பருமனையும்  சர்க்கரை நோயையும் இணைப்பாக தந்துவிட்டது.

MS international நிறுவனமும் BSB health care நிறுவனமும் மக்களுக்கு இந்த நவீன அரிசியை அறிமுகப்படுத்துகிறது. மதிய உணவாக இந்த அரிசியை தினம் 100 கிராம் அளவுக்கு பயன்படுத்துங்கள்.

நல்லது கேரள மக்கள் பயன்படுத்தும் கார் வரிசையை பயன்படுத்துங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் சொர்ணா முசிறி வகைகளையும் பயன்படுத்தலாம்.



தினம் ஒரு கீரையை வாரம் ஒரு முறை கண்டிப்பாக முருங்கைக்கீரையை



உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மதிய உணவு எடுத்துக்கொள்ளும் 15 நிமிடங்களுக்கு முன் நாம் அறிமுகப்படுத்தும் முடவாட்டுக்கால் சூப்பினை ஸ்டார்டராக எடுத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்த சூப்புடன் Dafonil நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த சூரணத்தில் 5 கிராம் கலந்து பயன்படுத்துங்கள்..


முதியோர்கள் உணவிற்குப் பிறகு வெற்றிலை பாக்கு நெல்லிக்காய் வற்றலுடன் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.

இளைய தலைமுறையினர் உணவிற்கு பின்னர் கோவில்பட்டி கடலை மிட்டாய் சுக்கு மிட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன் 

இனிய மதிய வணக்கம் 

மாலையில் சந்திப்போம்.



புதன், 28 பிப்ரவரி, 2024

பாரம்பரியத்தை மீட்போம் எபிசோட் 5


நவீன மருத்துவம் காலை உணவை    "பிரேக் பாஸ்ட்" என்று அழைக்கிறது.          
நமது உணவில் காலை உணவு மிக மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது .    நமது பாரம்பரிய பெரியோர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்த்தார்கள். காலையில் காலைக்கடலன் களை முடித்த பிறகு நீராகாரத்தையும் அதில் உள்ள பழைய சாதம் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை காலை உணவாக உண்டார்கள்.

இந்த நூற்றாண்டில் சிறந்த காலை உணவு இட்லி, வடை, சட்னி, சாம்பார்  என உலக சுகாதார நிலையம் அறிவித்திருக்கிறது ஏனெனில் இது சரிவிகித உணவாக அமைகிறது மாவு சத்து ,புரத சத்து, கொழுப்பு மூன்றுமே தேவையான அளவில் கிடைக்கிறது.

இந்த அவசரமான காலகட்டத்தில் நமது பிரதான உணவாகிய அரிசியில் இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம், ஆப்பம், போன்றவற்றை அடிக்கடி உண்பதால் அரசியில் உள்ள அதிக அளவு மாவுச்சத்து உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் காரணமாக அமைகிறது.

நவீன உணவியல் ஆராய்ச்சியாளர்கள் இதே இட்லி பொங்கல் தோசை போன்ற காலை உணவை தினம் ஒரு சிறுதானியத்தை பயன்படுத்தி செய்து பார்த்து அதனுடைய முடிவுகள் மிக நல்ல பலன்களை தந்தது அறிந்திருக்கிறார்கள்



எனவேதான் எம் எஸ் international நிறுவனம் BSB healthcare நிறுவனத்துடன் இணைந்து இது இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்றவற்றை சிறு தனியங்கள் மூலமாக செய்து முருங்கை இலை, கருவேப்பிலை புதினா, கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை பயன்படுத்தி துவையல் சட்னி செய்து காலை உணவுடன் எடுத்துக் கொள்ளும்போது அது நமது உடலில் சர்க்கரை அளவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்கிறது.

மாற்றாக தமிழகத்தின் கும்பகோணம் மாவட்டத்தில் விளையும் இந்த நவீன ரக அரிசியை பயன்படுத்தி மிக நல்ல பலனை கண்கூடாக காணலாம். 

மதிய உணவோடு நமது வள்ளலார் வழங்கிய தினம் ஒரு கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளில் உள்ள குளோரோஃபல் என்ற மூலக்கூறும் நமது ரத்தத்தின் உள்ள ஹீமோகுளோபின் என்கின்ற உயிர் சத்து மூலக்கூறுகளும் 99.9% ஒத்திருக்கிறது அன்றே நமது வள்ளலார் அவர்கள் அறிந்துள்ளார்கள்.






நமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானியங்கள் ஏழு வகைகளிலும் குறைந்த அளவு மாவுச்சத்தும் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்தும் அல்லாது தேவையான விட்டமின்களும் மினரல்களும் உள்ளன. இவைகளை வாரம் மூன்று முறை காலையில் பயன்படுத்தினால் போதும்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு வகைகளை பாருங்கள் அனைத்திலும் அதிக அளவு புரதச்சத்து உள்ளது இவைகளையும் அவ்வப்போது பயன்படுத்துங்கள்.
நமது முன்னோர்கள் நவ தானியங்களை மிகவும் பாதுகாப்பாக நமக்காக வைத்திருந்தார்கள் இதனை அவர்கள் கோபுர கலசங்களில் மறைத்து வைத்து பாதுகாப்பாக நமக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் எல்லா விதைகளும் 10 வருடங்களில் செயல் இழந்து போகும் என்பதால் 12 ஆண்டுக்கு ஒரு முறை அவற்றை எடுத்து மறுபடியும் கும்பாபிஷேகம் செய்வார்கள்.
உயிர் நீத்தோர்களுக்கு ஈமை காரியங்களை செய்யும்போதும், கோவில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுக்கும் போதும் நவதானியங்களை பேணிக்காப்பார்கள்.
நாம் இவைகளை நம் அன்றாட உணவில் சிறிதளவு முளைக்கட்டி பயன்படுத்தி வந்தால் வீணாக விட்டமின் மாத்திரைகளை நாம் விலகத் தேவையில்லை.
நமது காலை உணவு மாற்றுவதன் மூலமும் மதிய உணவில் மாவு சத்து குறைந்த அரிசியை பயன்படுத்துதல மூலமாகவே 
மேல்காணும்
 உடல் பருமன் ,சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ,மகப்பேறு இன்மை போன்ற நோய்கள் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

நவீன ஆராய்ச்சிகள் புற்றுநோயாளிகளுக்கு மாவு சத்து குறைந்த உணவுகளை கொடுத்து கொடுப்பதன் மூலம் அந்த புற்றுநோய் செல்களுக்கு குளுக்கோஸ் செல்லாமல் அவைகள் அழிவது கண்கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவே மருந்து
வள்ளலார் வழி நடப்போம் 
வாழ்க வளமுடன்

lion balachandran
D324J
founderv& CEO
BSB healthcare 
9940581843



திங்கள், 26 பிப்ரவரி, 2024

எபிசோட் 4 பாரம்பரியத்தை மீட்போம்

 28-2-24

நண்பர்களுக்கு காலை வணக்கம்

காலையில் எழு

கதிரவனைத் தொழு

 காலைக்கடன்களை முடி.

இதற்குப் பிறகு நாம் காலம் காலமாக   காப்பி டீ போன்ற பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருகிறோம். ஆங்கிலேயர்களை பார்த்து ' பெட் காஃபி' என்ற பெயரில் பல் கூட விளக்காமல்  காப்பி குடித்து உடல் நலனை கெடுத்துக் கொள்கிறோம்.

நமது முன்னோர்களின் காலை முதல் உணவாக நீராகாரம் என்ற ஒன்று இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை இரவு மிகுந்த சாதத்தில் நீரை விட்டு 12 மணி நேரம் அதனை மோருடன்நொதிக்க விட்டால் காலையில் மிக அருமையான பல நன்மைகளை தரக்கூடிய பானம் தயார்.

இன்று ப்ரோ பயோடிக் பானம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களுக்கு விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது.

DXN என்ற நிறுவனம் ஒரு நல்ல புரோ பயாட்டிக் பானத்தையும், 


மூங்கில்பிரஷ், காளான் காப்பி, மூலிகை டீ போன்ற உடலுக்கு நலம் தரக்கூடிய பல நல்ல பொருளை விற்பனை செய்து வருகிறது


 இதில் நீங்கள் பால் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்க்க தேவையில்லை.

திருவள்ளுவர் 

மருந்து என்ற ஒன்று உடலுக்கு தேவையில்லை. உடலுக்கு தேவை அற்றதை நீக்கி உண்டாலே போதும் என்று கூறியிருக்கிறார்.

Contact wa.me/c/919940581843

ஆங்கில மருந்துகளின் ஆதிக்கத்தால் நம் குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை நாம் அழித்து விட்டோம். அவைகளை மீண்டும் பெறுக செய்வதற்கு இந்த நீராகாரம் பெருமளவில் உதவி செய்கிறது. இயற்கையாகவே  "பி12" என்கின்ற vitamin ஐ  இலவசமாகவே உற்பத்தி செய்து தருகின்றது. 

இந்த இந்த விட்டமின் D, விட்டமின் B12 ரத்த பரிசோதனையை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள எங்களை அழைக்கவும்

BSB health care 9949581843 wa.me/c/919940581843

இந்த நிராகரத்தை தயாரிக்க நீங்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் தற்பொழுது கும்பகோணத்தில் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஒரு புதிய ரக சிறுதானிய அரிசியை Village rice கண்டுபிடித்திருக்கிறார்கள்.


 அதில் மாவு சத்து குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது என ஆய்வக பரிசோதனைகள் நிரூபிக்கின்றன.

இந்த அரிசியில் செய்த சாதத்தை 100 கிராம் அளவு எடுத்து மண் பாத்திரத்தில் மூழ்கும் வரை நீரை ஊற்றி சிறிதளவு மோரை ஊற்றி அறையில் மூடி வைத்துவிட்டு, 12 மணி நேரம் கழித்து, காலையில் இதை எடுத்து இத்துடன் கேரட் அல்லது பீட்ரூட் சிறிதளவு இந்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து  Rice squash என்ற பெயரில் இளைய  தலைமுறை யினருக்கு நாளை முதல் கொடுத்து வாருங்கள்.

இந்த அரசியை தவிர்த்து எந்தவிதமான அரிசியையும் நீங்கள் பயன்படுத்தலாம். பட்டை தீர்த்தப்படாத எந்த விதமான பாரம்பரிய அரிசியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ஜீரண நோய் பிரிவில் வயிரு சம்பந்தமான புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த நீராகாரத்தை உணவாக அளித்து புற்றுநோயை குணமாக்கி வருகிறார்கள் எதற்காக சில கோடிகளை செலவு செய்து ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து விட்டார்கள் இதனை உணர்ந்து நாம் நம் உணவில் இதனை முதல் உணவாக அனைவரும் எடுத்துக்கொள்ள வேலை வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு இந்த நல்ல பழக்கத்திற்கு மாற இயலவில்லை காப்பி , டீ  குடித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் மூலிகை டீ , காளான் காப்பி போன்றவை இன்று சந்தையில் கிடைக்கின்றன அவற்றை பால் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தி வாருங்கள் மிக்க பலன்கள் உண்டு.

நாம் முன்னரே குறிப்பிட்டவாறு நவீன பற்பசைகள் எவ்வாறு நமக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங்கள் உள்ளதோ அதேபோன்று ரசாயனங்கள் வெள்ளை சர்க்கரையிலும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் உள்ளன எனவே அவைகளை நீக்கி பருக முயற்சி செய்யுங்கள்.

எனவேதான் நம் முன்னோர்கள்   வெல்லம், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் போன்றவற்றை மட்டுமே இனிப்புக்காக சேர்த்துக் கொண்டார்கள்.

பால் மூலமாகத்தான் காசநோய் மற்றும் தொழுநோய் கிருமிகள் bovine type மனிதனை தாக்கி வந்தன எனவே தான் நம் முன்னோர்கள் வீட்டில் கரந்த பாலாக இருந்தாலும் அதனை வெண்கல பாத்திரத்தை உபயோகித்து பாலை கொதி நிலைக்கு சென்று கொதிக்க விட்டு சட்டென்று இறக்கி குளிர வைத்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விடுவார்கள். இப்ப நவீன மருத்துவத்தில் pasteurisationஎன்று கூறுவார்கள். இந்த மருத்துவ பலன் நமது நவீன பால் குக்கர்களில் கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே பாரம்பரியத்தை எள்ளி நகை ஆடாமல் அவற்றில் உள்ள நவீன மருத்துவ உண்மைகளை அறிந்து கடைப்பிடித்து நலமுடன் வாழ்வோம்.

வாழ்க வளமுடன்.



 


பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் எபிசோட் 3

 அன்பிற்குரிய நண்பர்களே நமது முன்னோர்கள் வாழ்ந்த பாரம்பரியமான வாழ்க்கை முறையை முடிந்த வரை பின்பற்ற 10 கட்டளைகளை தினம் ஒன்றாக தந்து கொண்டிருக்கிறேன் படித்து பாருங்கள். பிடித்திருந்தால் கடைப்பிடியுங்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பொது மொழி.

நாம் இழந்த வாழ்க்கையை மீண்டும் நம் சந்ததிகளுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் உங்கள் செல்வங்களை அதிகாலையில் படுக்கையிலிருந்து எழ செய்ய வேண்டும்.

காலை கடன்களை கடந்த இரண்டு எபிசோடுகளில் கூறியவாறு முடிக்க வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில் கழிப்பிடங்கள் ஊருக்கு வெளியேயும் அல்லது வீட்டிற்கு வெளியே புறக்கடையிலும் இருந்தது ஆனால் இன்று வீட்டுக்குள்ளேயே அட்டாச் பாத்ரூம் என்ற அளவில் சுருங்கி விட்டது எனவே காலைக்கடன்களை முடிக்க சற்று தூரம் கலார நடந்து சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து கடன்களை முடியுங்கள்.

மலச்சிக்கல் இல்லாத காலை பொழுதே மிக மகிழ்ச்சியான நாளை தரும் எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் நார்சத்து மிகுந்த உணவுகளையும் (கீரைவகைகள்) இறவில் திரிபலா என்கின்ற மாத்திரையும் எடுத்துக் கொள்ளலாம்

வைகறையில் எழுந்து காலை கதிரவன் முன் சில நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் என்கின்ற ஒரு சிறு யோகா பயிற்சியினை முடிந்த அளவு ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள்.



முதியோர்களும் மற்றவர்களும் நாற்காலியில் அமர்ந்தபடி இந்த உடற்பயிற்சியினை முடிந்தவரை செய்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும்.

இந்த காணொளியை காட்சியை கண்டு முயற்சி செய்யுங்கள்

https://youtu.be/TbfeUeOCwmo?si=B9_QskOceMscxQBv



குறிப்பாக ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக இந்த பயிற்சியை செய்தாக வேண்டும் ஏனெனில் அவர்கள் இயற்கைக்கு மாறாக பகலில் உறங்கி இரவில் விழித்திருந்து சூரிய ஒளி படாமல் வாழ்வதால் அவர்களுக்கு பிற்காலத்தில் விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு அதுவே குழந்தையின்மை என்கின்ற மலட்டுத்தன்மைக்கும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புள்ளது.

வைட்டமின் டி குறைபாடு கண்டறிய 2000 ரூபாய் செலவாகும் பிறகு அதற்கான மருந்துகள் இல்லை என்பதால் மீண்டும் சூரிய ஒளியில் நிற்க சொல்வார்கள். எனவே டிரீட்மென்ட் இஸ் பெட்டர் தன் பிரிவென்ஷன் என்பதற்கு ஏற்ப வருமுன் காப்போம் வாழ்க வளமுடன்.



பாரம்பரியத்தை மீட்போம்



episode 1

அன்பிற்குரிய நேயர்களே சமீபத்திய செய்தி பிளாஸ்டிக் பிரஷ் கொண்டு பற்களை  துலக்குவதால் அதிலிருந்து வெளிப்படும் நானோ துகள்கள் பல்லுக்கும்  உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள். 

நம் முன்னோர்கள் முன்னரே இதை அறிந்ததால் வேப்பங்குச்சி ஆலம் குச்சி கொண்டு பல் விளக்கினார்கள்.

ஆலும் வேலும் பல்லுக்குருதி என்ற பழமொழியையும் தந்து சென்று இருக்கிறார்கள்.

இன்றைய நாகரீக உலகத்தில் பள்ளி பருவத்திலேயே பல டூத் பேஸ்ட் நிறுவனங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு பொது இடங்களிலும் இலவசமாக இதனை கொடுப்பதை நீங்கள் அறிவீர்கள் மேலும் நாம் பயன்படுத்தும் பற்பசைகளில் ஐந்து விதமான ஆபத்தை உண்டு பண்ண கூடிய துணி துவைக்கும் சோப்பில் கூட போடத் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை பற்பசைகளில் இன்றும் உபயோகித்து வருகிறார்கள் இனிப்பு சுவைக்காகவும் அதிக நுரை தருவதும் நம் பற்களை மேம்படுத்துகிறது என்று நாம் தவறாக நினைத்திருக்கிறோம். மாறாக இவைகள் நமது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள பிடிமானத்தை சிறிது சிறிதாக குறைக்கின்றன. இதனை நீங்கள் பற்பசை கொண்டு விளக்கும் போது அவற்றில் ரத்தம் கசிவதை நிச்சயமாக காண்பீர்கள். இனியாவது நம் முன்னோர்கள் சொன்னதை கடைப்பிடியுங்கள் நம் கண்களை எப்படி நம்முடைய விரல்கள் தெரிந்தே குத்தாதோ அதேபோலத்தான் நாம் விரல்களால் பற்களை பற்பொடி பொடி கொண்டு விளக்குவதால் ஈறுகள் இறுகி பற்களை விழாமல் நெடுங்காலம் காத்திருக்கும். நம் முன்னோர்கள் சொன்னதை கூட கேட்க வேண்டாம் இன்று டிவியில் பல லட்சம் கொடுத்து உங்கள் பற்பசையில் 

கரி இருக்கிறதா 

உப்பு இருக்கிறதா

 என்று கேட்பதையாவது கேட்டு இனி நாங்கள் நெடுங்காலமாக பரிந்துரைக்கும் மூலிகை பொடிகளை உபயோகித்து மூன்றே நாட்களில் பூரண வாய் ஆரோக்கியத்தை பெறுங்கள்.

உங்களுடைய தாத்தா அல்லது பாட்டி யாராவது பல் மருத்துவரிடம் சென்றதாக சரித்திரம் இருந்தால் இன்பாக்ஸில் குறிப்பிடுங்கள்.

நீங்கள் எந்த நேர்மையான ஆயுர்வேத கடையிலையாவது உப்பு கரி ஆலம் விழுது வேம்பு காசு கட்டு கண்டங்கத்திரி போன்ற மூலிகை கலந்த கலவையை பயன்படுத்துங்கள். மாற்றத்தை உணருங்கள். 

எங்கள் நீண்டகால ஆராய்ச்சியின் படி தயாரிக்கப்பட்ட

BIXO DENT புறப்பொடியை 12 கிராம் இலவசமாக பெற என்னுடைய தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.



தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களால் பிரஸ் செய்யும் பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை என்றால் தற்போது நீங்கள் மூங்கிலால் செய்யப்பட்ட பிரஷ்களை விலைக்கு வாங்கி பயன் படுத்தி நீண்ட ஆயுள் வரையும் ஆரோக்கியமான பற்களையும் ஈருகளையும் பெறுங்கள்.

குறிப்பாக 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கிருமி தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு காலையில் இனிப்பு சுவை வாயில் படுவதால் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுக்கள் தூண்டப்பட்டு தவறாக செய்தி மண்ணீரலுகக்கு அனுப்பப்பட்டு இன்ஸ்சுலீன் தேவையற்று சுரந்து வீணாகும் எனவே தான் 40 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பலருக்கும் வெளிப்படுகிறது.

மேலும் நம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் அறு சுவைகளில் மூன்று சுவைகள் உப்பு,கசப்பு ,துவர்ப்பு இந்த பற்பொடி யில் கிடைத்துவிடும்.

மேலும் விவரங்களுக்கு

BSB healthcare

9940581843




ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பாரம்பரியத்தை மீட்ப்போம்


 அத்தியாயம் 2

நண்பர்களுக்கு வணக்கம் சென்ற பதிவில் நாம் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த பற்பசைகளை பற்றியும் பிரஸ் வகைகளை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

பிளாஸ்டிக்கில் உள்ள கேடுகளை பற்றி தெரிந்து கொண்டோம்.

 மேலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை கலந்த பற்பொடிகளை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

 மூன்று நாட்களுக்கான இலவச பற்பொடியைப் பெற விண்ணப்பிக்க எங்கள் எண்ணையும் கொடுத்திருக்கிறோம்.

wa.me/c/919940581843

இன்று மேலும் ஒரு தகவலாக ஒரு தேக்கரண்டி ( 5 ml ) நல்ல எண்ணெயை பயன்படுத்தி வாய் மூலமாக ஐந்து நிமிடங்கள் கொப்பளிப்பதன் மூலம்                  (oil pulling ) என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்வோம். 


இந்த காணொளியை கண்டு பின் தொடருவோம்

https://youtu.be/l7W6TGaCWSI?si=oddEhT2N_rQOBKFi

இதைத் தான் நம் முன்னோர்கள் வைத்தியனுக்கு தருவதை வாணியனுக்கு கொடு என்று கூறி சென்றுள்ளார்கள்.

காலையில் எழுந்தவுடன் நீரில் வாயை கொப்பளித்து விட்டு பிறகு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை வாயில் விட்டு ஐந்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வாயை நன்றாக கொப்பளிப்பதன் மூலம் இந்த தேங்காய் எண்ணெய் நம்மளுடைய வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ் நீர் சுரப்பிகளை தூண்டி அதில் உள்ள அடைப்புகளை நீக்கி அதிக அளவு உமிழ் நீரை சுரக்க வைக்கும் இந்த உமிழ் நீரில் உள்ள சில ரசாயனங்கள் எண்ணெயில் உள்ள கொழுப்புடன் சேர்ந்து sappanification என்கிற இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி  இயற்கையான சோப்பினை தயாரித்து அதன் மூலமாக வாய்,பற்கள், தொண்டை, மூக்கின் பின்புறம், காது மற்றும் வாயை இணைக்கும் குழாய் ஆகிய இடங்களில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும்.

இதனால் வாய் வழியாக தொற்றை ஏற்படுத்தக்கூடிய பல விதமான நோய்க்கிருமிகளை இங்கேயே அழித்து விடும் சோப்பு போட்டு கையை கழுவினால் corona போற்ற பெரிய கிருமிகளை கூட அகற்றும் என்பதை சென்ற ஆண்டுகளில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இதைத்தான் நம் முன்னோர்கள் 

கூழ் ஆனாலும் குளித்துகுடி

கந்தையானாலும் கசக்கி கட்டு            

என்று ஒரு சென்றுள்ளார்கள்.

ஆய்வுக்கூட தொழில்நுட்பத்தில் சில அனுபவங்களை பெற்றுள்ளதால் சில மருத்துவ உண்மைகளை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

முதற்கட்டமாக இதன்மூலம் வாயில் உள்ள உமிழ் நீரின் சிறப்புகள். உமிழ் நீரில் amylase ptyalin என்கிற இரண்டு நொதிகள் உள்ளன. இவை நாம் உண்ணும் உணவில் உள்ள சக்கரை சத்துக்களை எளிய சர்க்கையாக மாற்றி இரைப்பைக்கு தள்ளுகின்றன. இதனால் இரைப்பைக்கு உணவை ஜீரணிப்பதில் பாதி சிரமத்தை உமிழ்நீர் குறைக்கின்றது. 

இதைத்தான் நம் முன்னோர்கள் நொறுங்க தின்றால் நூறு வயது என்று கூறி சென்றுள்ளார்கள்.

எனவே நாம் அனைவரும் உணவு உண்ணும் போது கவலம் கவலமாக வாயில் இட்டு இரண்டு அல்லது மூன்று முறை மென்று பின்னர் மெதுவாக விழுங்க வேண்டும் உணவு உண்ணும் போது பேசிக்கொண்டும் கைபேசியை பார்த்துக் கொண்டோம் இருக்கக் கூடாது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

 அதிக அளவு உமிழ் நீரை சுரப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஜீரணத்தில் பாதியை வாயிலேயே முடித்து விடும் உமிழ் நீரில் உள்ள நொதிகள் சக்கரையை உடைத்து எளிய சர்க்கரையாக உள்ளே அனுப்பும். இதனால் தேவையான அளவு மட்டும் இன்சுலின் சுரந்து அதிக அளவு மாவு சத்தினை குளுக்கோஸ் ஆக மாற்றி செல்லுக்குள் செலுத்தும் இதனால் ஆயுள் முழுவதும் இன்சுலின் தடையின்றி கிடைக்க வழி கோலும்.

சாதாரணமாக தொண்டையில் streptococci staphylococcus போன்ற நுண் கிருமிகள் இருக்கும் இவை சுரக்கும் சில நொதிகள் (exotoxin )தான் பிற்காலங்களில் இதய வால்வுகளையும் மூட்டு தசைகளையும் பாதிக்கின்றது. oil pulling அதன் மூலம் இக்கிருமிகள் மிக எளிதாக அழிக்கப்படுகின்றன.

இதனை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள முன்பும் பின்பும் throat swab test ஐ நுண்ணுயிர் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.

உடம்பிற்கு தலையே பிரதானம் அந்த தலையில் வாய் மூலமாகத்தான் பல நோய்க்கிருமிகள் உள் நுழைகின்றன இவைகளை முன்னரே தடுத்து நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமும் பெறுவோம்.

வாழ்க வளமுடன்







Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...