புதன், 26 ஜூலை, 2023

ஏற்றி விட்ட ஏணிப்படிகள். அத்தியாயம் 4

 1972 ல் கிங் நிலையத்தில்

 professor செரியன் pathology பிரிவயும் வேதகிரி ,பிரபு ,மகேந்திரன், 

biochemistry பிரிவையும், 

microbiology பிரிவை ஒரு மருத்துவரும் எங்களைப் பயிற்றுவித்தார்கள்.

நெல்லைக்கு ஒரு மோஹன் தாஸ் அமைந்தது போல எங்களுக்கு ஒரு ஆரோக்கியதாஸ் அமைந்தார். 

மிக பொறுமையாக ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்தார்.

இங்கிருந்து படித்து சென்ற மூத்த technician கள் அவரவர்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில் ஏதாவது அபூர்வமான specimen கிடைத்தால் சிரமம் பார்க்காமல் அதனை கொண்டு வந்து கிங் நிலையத்தில் தந்து எங்களுக்கு அதனை காண்பிப்பார்கள்.

இந்த வகையில் நான் கற்றுக் கொண்டது balantitium coli . இது ஒரு uni cellular parasite.Cilliate வகையை  சார்ந்தது கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்கக் கூடியது. நம்மில் பலர் இதனை பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று எண்ணுகிறேன். 

இது பின்னாளில் நான் டாக்டர் கருணாநிதி என்பவர் கிளினிக்கில் பணிபுரியும் பொழுது ஒரு நோயாளிக்கு கண்டுபிடித்தேன் .உடனே அவர் எழுந்து வந்து அதனை உறுதிப்படுத்திக் கொண்டு உடனடியாக, மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் அவரது மகன் மகள்களை அழைத்து வந்து என்னிடம் அவர்களுக்கு கற்பிக்க சொன்னார். இவ்வாறு அந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் ஆய்வு கூட நுட்புனர்களை நன்றாக மதிப்பாக வைத்திருந்தனர்.

இந்தப் பாராட்டு எனக்கு கிடைத்ததற்கு எனக்கு பயிற்சி அளித்த சீனியர்களே காரணம்.

உங்கள் பார்வைக்காக ஒரு படத்தையும் ஒரு காணொளி காட்சியையும் இணைத்துள்ளேன்.

இவ்வாறு மைக்ரோஸ்கோப் வழியாக காட்டும் பொழுது அந்த ஒரு பீல்டில் நம் காண வேண்டிய செல் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்வதில் சில நண்பர்கள் சிரமப்படுவார்கள். பிரத்யோகமான eye piece களில் needle போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அப்பொழுது அவர் எதைக் காட்டுகிறாரோ அதை நாம் சரியாக பார்க்க இயலும். இந்த முறையை நான் என்னுடைய நுட்பம் மூலமாக அப்பொழுது இருந்த கிளாஸ் மார்க்கிங் பென்சில் கொண்டு eye piece ல் ஒரு கோடு வரைந்து அதனை மற்ற நண்பர்களுக்கு காண்பித்து கற்பித்தேன்.

மற்றும் ஒரு சீரியர் சதாசிவம் என்பவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றினார் அவரிடம் பல நுட்பங்களை கற்றுக் கொண்டேன்.

தாம்பரம் சானிடோரியம் காசநோய் மருத்துவமனையில் வாசு என்ற ஒரு சீனியரிடம் AFB stain ஐ திறம்பட கற்றுக் கொடுத்தார். இது பின்னாலில் நான் அரசு வேலைக்கு நேர்முக தேர்வின் போது மிகச் சரியாக பதில் கூறியதால் எனக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அரசு வேலை கிடைத்தது. 

அப்போது என்னுடன் பணி புரிந்தவர்கள் திரு ஜெயராஜ் திரு வேணுகோபால் போன்ற நண்பர்கள். 

காச நோய் ஒரு தொற்று நோய் என்பதால் நண்பர்கள் காசநோய் பிரிவிற்கு செல்ல தயங்கினார்கள். போருக்கு என்று வந்த பிறகு பின்வாங்குவதில் எந்த பலனும் இல்லை எனவே நான் ஆர்வமாக நான் செல்லுகிறேன் என்று கூறியதால் அப்பொழுது அந்த மருத்துவமனையின் இயக்குனராக இருந்த FS philps அவர்களின் பாராட்டுகளை பெற்றேன்

இது எனக்கு ஒரு மிக நல்ல வாய்ப்பினை அளித்தது. காசநோய் பிரிவு காலை 7:00 மணி முதல் ஒரு மணி வரை. அந்த பிரிவில் பேரறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் அவர்களின் தலைமையில் பணியாற்றும் பாக்கியம் கிடைத்து அண்ணாவின் குடும்பத்தாரோடு நெருங்கி பழகும் வாய்ப்பை எனக்கு அளித்தது.

எனவே நான் இன்றைய தலைமுறையினர் கலுக்கு தரும் அறிவுரை வாய்ப்புகளை தவற விடாதீர்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு நுட்பத்தை கற்றுக் கொள்ளுங்கள் பிற்காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த மருத்துவமனையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை அடுத்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறேன்.



மிக அருமையான ஒரு காணொளி காட்சி காண தவறாதீர்கள்



ஏற்றிவிட்ட ஏணிப்படிகள்

அத்தியாயம் 4

ப்ரொபசர் செரியன், pathology

வேதகிரி, பிரபு, மகேந்திரன், biochemistry

Microbiology க்கு என தனித்தனியாக பேராசிரியர்கள்.

பயோ கெமிஸ்ட்ரி பொருத்தவரையில் நாங்கள் பரிசோதனை செய்து முடித்து ஸ்டாண்டர்ட் டெஸ்ட் பிளாங்க் ஆகிய டியூப் களுடன் வரிசையாக நின்றால் பயோக்கேமிஸ்ட்  எங்களுக்கு ரீடிங் எடுத்து தருவார். பயன்படுத்தி beers law பயன்படுத்தி கால்குலேட் செய்து முடிவுகளை தருவோம். இங்கு முன்னாள் மாணவர்கள் பலரும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் கிடைக்கும் அதீத ஸ்பெசிமென்களை சிரமம் பார்க்காமல் கொண்டு வந்து தந்து எங்களுக்கு தருவார்கள். அந்த வகையில் நான் பார்த்த ஒன்று balantitium coli . இதனை நம்மில் பலர் இதுவரையில் பார்த்திருக்க மாட்டீர்கள்.

Cilliate சார்ந்த இது uni cellular parasite. வயிற்றுப்போக்கை உண்டாக்கக் கூடியது.

இதை பின் நாட்களில் டாக்டர் கருணாநிதி என்பவர் கிளினிக்கில்  பணிபுரியும் பொழுது ஒரு நோயாளிடமிருந்து கண்டுபிடித்து அவரிடம் பாராட்டுகளைப் பெற்ரேன். அந்தக் காலத்தில் மருத்துவர்கள் 

நுட்புணர்களை பாராட்ட தவறியது இல்லை.

அவரது மகள் இந்திரா மகன் சாய்ராம் இருவரும் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை அழைத்து என்னிடம் பார்த்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

எங்களது காலத்தில் கிங் நிலையத்தில் 20 நபர்கள் பயிற்சி பெற்றோம். இதைப் போல மற்ற ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 20 பேர்கள் என வருடத்திற்கு 100 புதிய டெக்னீசியன்கள் உருவாக்கினார்கள்.

எனவே அனைவருக்கும் ஒரு மாதங்களில் அரசு வேலை கிடைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நேரடியாக கிரேட் ஒன் படிக்க இயலாது நேரடியாக கிரேட் ஒன் போஸ்டிங்கும் கிடைக்காது. இரண்டு ஆண்டுகள் grade 2 ஆக பணிபுரிந்து பின்னர் பதவி உயர்வு பெற வேண்டும்.

சீராக இயங்கி வந்த இந்த சிஸ்டம் வரும் ஆண்டுகளில் ஒரு நல்ல பயிற்சி இருப்பதை அறிந்த அரசு ஒவ்வொரு மருத்துவமனையிலும் 50 நபர்களை தேர்வு செய்தது அதன் விளைவாக ஒரே வருடத்தில் 300 உருவாகி வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்தார்கள்.

காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து ஐராவதம் laboratory ஐ தவிர வேறு தனியார் சுபரிசோதனை நிலையங்கள் சென்னையில் இல்லை.

அக்கால கட்டத்தில் அரசு ஓர் ஆண்டுகள் பயிற்சி நிறுத்தி வைத்தது.

 இன்றைய சூழ்நிலையில் MRB ல் சுமார் 30,000 டெக்னீஷன்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதைத் தவிர Amilta, BSS உன் கிராமப்புகள் வேறு ஆய்வக பயிற்சி பள்ளிகளை திறந்து நூற்றுக்கணக்கான டெக்னீசியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

73 ல் பயிற்சி சிறப்பாக முடித்து சான்றிதழ் பெற்று வேலை வாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்து ஒரே வாரத்தில் நேர்முகத் தேர்வு  நடந்து govt kasthuri Bai hospital ல் ஒரு வருட டேபுடேஷன் போஸ்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

டெக்னீஷண்களின் வேலையின் மதிப்பை  முக்கியத்துவத்தை அரசு உணர்ந்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்று ஒரே சங்கம் இருந்தது இன்று மாவட்டத்திற்கு இரண்டு சங்கங்கள் உள்ளன.

உங்கள் பார்வைக்காக சில படங்களை இங்கு வைத்திருக்கிறேன்.

https://youtu.be/BnLtVm1G-Ro

பயோ கெமிஸ்ட்ரி பொருத்தவரையில் நாங்கள் பரிசோதனை செய்து முடித்து ஸ்டாண்டர்ட், டெஸ்ட் பிளாங்க், ஆகிய டியூப் களுடன் வரிசைகள் என்றால் payமிஸ்ட் அவர் எங்களுக்கு ரீடிங் எடுத்து தருவார். பயன்படுத்தி beers law பயன்படுத்தி கால்குலேட் செய்து முடிவுகளை தருவோம்.

 எங்களது காலத்தில் கிங்நிலையத்தில் 20 நபர்கள் தான் பயிற்சி பெற இயலும் இதைப் போல மற்ற ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 20 பேர்கள் என வருடத்திற்கு 100 புதிய டெக்னீசியன்கள் உருவாக்கினார்கள்.

எனவே அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் அரசு வேலை கிடைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நேரடியாக கிரேட் ஒன் படிக்க இயலாது நேரடியாக கிரேட் ஒன் போஸ்டிங்கும் கிடைக்காது. இரண்டு ஆண்டுகள் grade 2 ஆக பணிபுரிந்து பின்னர் பதவி உயர்வு பெற வேண்டும்.

சீராக இயங்கி வந்த இந்த சிஸ்டம் அடுத்த ஆண்டுகளில் இப்படி ஒரு நல்ல பயிற்சி இருப்பதை அறிந்த அரசு ஒவ்வொரு மருத்துவகலூரிகளிலும் 50 நபர்களை தேர்வு செய்தது அதன் விளைவாக ஒரே வருடத்தில் 300 நுட்புணர்கள் உருவாகி வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்தார்கள்.

அந்த காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து ஐராவதம் laboratory ஐ தவிர வேறு தனியார் பரிசோதனை நிலையங்கள் சென்னையில் இல்லை.

அக்கால கட்டத்தில் அரசு ஓர் ஆண்டுகள் பயிற்சி நிறுத்தி வைத்தது அதைப்போல இன்றைய சூழ்நிலையில் MRB ல் சுமார் 30,000 டெக்னீஷன்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதைத் தவிர Amilta, BSS உன் அமைப்புகள் வேறு ஆய்வக பயிற்சி பள்ளிகளை திறந்து நூற்றுக்கணக்கான டெக்னீசியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

73 ல் பயிற்சி சிறப்பாக முடித்து சான்றிதழ் பெற்று வேலை வாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்து ஒரே வாரத்தில் நேர்முகத் தேர்வு  நடந்து govt kasthuri Bai hospital ல் ஒரு வருட டேபிடேஷன் போஸ்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

டெக்னீஷண்களின் வேலையின் மதிப்பை  முக்கியத்துவத்தை அரசு உணர்ந்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்று ஒரே சங்கம் இருந்தது இன்று மாவட்டத்திற்கு இரண்டு சங்கங்கள் உள்ளன.

உங்கள் பார்வைக்காக சில படங்களை இங்கு வைத்திருக்கிறேன்.


https://youtu.be/BnLtVm1G-Ro

மீண்டும் நாளை சந்திப்போம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...